ஏது உரிமை?


பெண்ணாக பொறந்தாலே சொத்து போச்சுன்னு யேசுராக...

தலை நிமிர்ந்து நடக்கையிலே திமிரென்று யேசுராக...

வீதியெங்கும் யேசையிலே என் ஆடை கூட கசங்குது...

காட்சியாக பார்க்கையிலே பொழப்புக்காக பொறுத்தேன்...

மானம் போதுமுன்னு நினைக்கையிலே வறுமைக்காக நடந்தேன்...

ஓயாது ஓடுனாலும் ஒரு பொட்டு தூக்கமில்ல...

சம உரிமை உண்டு நாளும் உரிமையில்லனு துரத்துறாங்க...!

Comments

Post a Comment