கைபேசியின் உருக்கம்


என்னை பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாய்...!

என்னை நொடிப்பொழுதும் பிரியாதிருந்தாய்...!

உன் சுக துக்கங்களை பகிர்ந்திட்டாய்...!

உன் பசி மறந்து என் பசியை போக்கினாய்...!

எப்போதும் என்னை காக்கும் கவசமாய் இருந்தாய்...!

என் ஆயுட் காலம் நெருங்க நெருங்க வருந்தினாய்...!

இறுதியில், இந்த கைபேசி உனக்கு தொல்லை பேசியாக  நினைத்து தூக்கி எறிந்தாய்...!

Comments