என் அன்னைக்கு ஒரு கவிதை...


நான் பிழைக்க, உன் சாவையும் கருதாது உயிர் கொடுத்தாய்...

குழந்தை பருவத்தில், என் சிகையை அழகாக்க உன் சிகையை தொலைத்தாய்...

தந்தையிடம், என்னை காத்த கவசமாய் நின்றாய்...

நான் உண்ண, உன் பசியை தானாமாக்கினாய்...

என் வாழ்வை என்னி, தினமும் நீ கண்ணீர் சிந்தினாய்...

கோபத்தில் உன்னை திட்டியதற்கு, உன் அழுகையில் என்னை அடித்தாய்...

உன்னை போன்ற ஒரு மகளை ஈன்று, எனக்கு சீராட்டும் வரம் தந்திடுவாய்...

Comments